Also Watch
Read this
By: Manigandan Raja

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்மநபர்கள் :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் இருந்து செல்லம்பட்டுச் செல்லும் அரசு பேருந்தை தற்காலிக ஊழியர் ஜெகதீசன் என்பவர் இயக்கி வருகிறார் அப்போது, அரசம்பட்டு பேருந்து நிலையம் அருகே சென்றபோது போது பேருந்தை வழிமறித்து அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் தற்காலிக அரசு பேருந்து ஓட்டுநர் கத்தி கூச்சலிட்டுள்ளார், இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சங்கராபுரம் செல்லம்பட்டு செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுநரை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved