Also Watch
Read this
By: Manigandan Raja

பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலை முருகன் கோவிலில் 4-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முத்துமலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட பின்பு சந்தன காப்பில் தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாரணை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து உள்ளூர் மட்டுமின்றி வாழப்பாடி, பேளூர், ஆத்தூர், சேலம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து காவடி, பூங்கரகம், மற்றும் 3000 திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
இந்த பால்குடம் ஊர்வலமானது கோவில் முகப்பு நுழைவாயில் தொடங்கி கோவிலை சுற்றி வலம் வந்து உற்சவம் மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பெண்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அபிஷேகம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்கள் அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முத்துமலை முருகப்பெருமானை
தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved