Also Watch
Read this
By: Web Team

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் நான்காவது நாளாக நீடித்து வருகிறது. சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தினர். இருப்பினும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என செவிலியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved