Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், பெரும்பாலான நெல்மூட்டைகள் திறந்தவெளி பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் புகார் தெரிவித்தனர்.
மேலும், கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.