Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி 20 ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2014 ஆம் ஆண்டு போடப்பட்ட 16 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள், தற்போது கஞ்சி காய்ச்சி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாகவும், பல கோடி ரூபாய் ஜவுளிகள் தேக்கமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved