Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட, அவர்களின் உறவினர்களை கடந்து சென்ற வேன் ஓட்டுநரை மீனவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு வேன் மட்டும் அவர்களை தாண்டி போக முயன்றதால் ஆத்திரமடைந்தவர்கள் ஓட்டுநரை தாக்க முயன்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved