Also Watch
Read this
By: Manigandan Raja

ஊருக்குள் புகுந்த குட்டி முதலை :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள தில்லை காளி கோயில் இப்பகுதியில் தமிழக அரசு புதியதாக அண்ணாமலை நகர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு விரைவாக செல்வதற்கு புதியதாக ஒரு பைபாஸ் சாலையை அமைத்து வருகிறது.
இப்பகுதியில் நீர் நிலைகள் அமைந்த பகுதியாகும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை முதலை குட்டி ஒன்று வீட்டு வாசலில் படுத்திருந்தது இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நீர் நிலைகள் வெயில் காலத்தில் வறட்சியாக காணப்படுவதால் முதலைகள் இறையைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகிறது இதைப் பற்றி பலமுறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை ஏதோ வருகிறார்கள் பிடிக்கிறார்கள்.
அதை கொண்டு சென்று சிதம்பரம் அருகில் உள்ள வக்கார மாறி என்ற குலத்தில் விட்டு விட்டு சென்று விடுவார்கள் இது வழக்கமாக நடைபெறுகின்ற ஒரு நிகழ்வுகள் வெயில் காலத்தில் முதலைகள் நீர் நெடிகளில் இருந்து வெளியில் வந்து ஆடு மாடு கோழி ஏன் இதுவரை அவர் ஐந்துக்கு மேற்பட்ட மனிதர்களை மரணம் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.