Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை பசுமை முறையில் மீண்டும் தொடங்க வேண்டும் என தூத்துக்குடி வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விஞ்ஞான அடிப்படையிலான தீர்வு கிடைத்துள்ள நிலையில், மாநில அரசு சமநிலையான முடிவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தொழிற்சாலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு, மக்களின் வாழ்வாதார பாதிப்பு, மாநிலத்திற்குமான காப்பர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved