Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில், தூய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், கணினி உதவியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.