Also Watch
Read this
By: Manigandan Raja

மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் :
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா அறுவடைக்கு பிறகு கோடை பயிர்களான பச்சை பயிறு உளுந்து மற்றும் பணபயிரான பருத்தி சாகுபடி பணியில் தற்பொழுது மும்முரமாக
விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பருத்தி சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதும் மேலும் பருத்தி விதைப்பதற்கு தட்பவெட்ப நிலை சமமான நிலை இருந்தால் மட்டுமே விதைப்பு செய்த பருத்திவிதை முளைக்கும் அந்த வகையில் லேசான ஈரணைப்பில் குச்சிகளை வைத்து துளையிட்டு அந்த ஈரப்பதத்தில் பருத்தி விதையை போட்டாலும் அதற்கு ஏற்ப வெப்பநிலை இருக்கக்கூடிய ஆற்று மணலை நிரப்பினால் மட்டுமே அந்த பருத்தி விதை முளைக்கும் அதன் காரணமாக ஒரு மூட்டை அல்லது இரண்டு மூட்டை ஆற்றுக்கரைகளில் விவசாயிகளுக்கு மணல் எடுக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணல் திருட்டு என்கிற பேரில் விவசாயிகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved