Also Watch
Read this
By: Manigandan Raja

அருவியில் குவிந்த மக்கள் :
குமரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றன குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியும் ஒன்று தினசரி இங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தமிழகம் ,கேரளம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
அந்த வகையில் கோதையாற்றில் தண்ணீர் குறைந்து திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் குறைவாகவே கொட்டி வருகிறது. இருந்தாலும் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வந்த வண்ணம் உள்ளனர்.
வரும் சுற்றுலா பயணிகளும் தண்ணீர் கொட்டும் பகுதிகளில் சென்று நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்து செல்கின்றனர். அதுபோல அருவியின் அருகாமையில் இருக்கும் நீச்சல் குளத்திலும் சென்று
குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தும் செல்கின்றனர்.
மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள கோதையாற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்லுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved