Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் போடியில் வனத்துறையினரின் தடையை மீறி வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வனப்பகுதியில் மாடு மேய்க்க வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி சீமான் போராட்டம் நடத்தினார்.
.அப்போது வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்கள் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved