Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி - வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகேசர் கோவிலில், 39 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்னதான விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிங்கம்புணரி வணிகர் நல சங்கம் சார்பில், கோவில் முன்பு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, 4 டன் அரிசி, 8 டன் காய்கறிகளை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட அடுப்புகளில் உணவு சமைக்கப்பட்டது.
மலைபோல் குவிக்கப்பட்ட அன்னத்தில் லிங்கம் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு மூன்று வகை கூட்டு, பொரியலுடன் சுடச் சுட அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved