Also Watch
Read this
By: Web Team

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.
போலீசார் கஸ்டடியில் அஜித்குமார் கொல்லப்பட்டதை அடுத்து சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின்னர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கையை கவனித்து வந்த நிலையில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவப்பிரசாத் நியமிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved