Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் ஏழை தொழிலாளர்களிடம் இருந்து கிட்னி பெறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், கிட்னி விற்றவர்கள் யார் யார்? வாங்கியவர்கள் யார் யார்? முறையான ஆவணங்கள் கொடுத்து கிட்னி தானம் பெற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த குழுவினர் 2 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved