Also Watch
Read this
By: Web Team

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் கொடூர தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், உதயசங்கர், சிவசங்கர் உட்பட 11 பேர் இரண்டு படகில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது இலங்கை கடற் கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, படகின் என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் சிவசங்கர் என்ற மீனவர் படுகாயங்களுடன் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved