Also Watch
Read this
By: Web Team

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடு கட்டியிருக்கும் தேனீக்களால் நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் ஆபத்து காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் தேனீக்கள் கூடு கட்டி இருக்கின்றன.
குறிப்பாக, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவான 5-ஆவது மாடியில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் மேல்புறம் தேனீக்கள் பெரிய அளவிலான தேன்கூடை கட்டியுள்ளன.
இந்த வார்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்துள்ள நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் ஆபத்தை உணராமல் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved