மருத்துவமனையில் அனுமதி : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பெரியபேட்டை பகுதியில் இன்று காலை சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, பணிக்கு சென்றவர்களை, துரத்தி துரத்தி, கடித்ததில். பெரியப்பேட்டை பகுதியைச் சேர்ந்த : தீபக் ராஜ் (வயது 35) சந்திரன் (வயது 70)தட்சிணாமூர்த்தி (வயது 65) கார்த்திக் (வயது 45) ஆகிய 4 நபர்கள் கால்களில் பல இடத்தில் காயம் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றிதிரியும் தெருநாய்களை, உடனடியாக நகராட்சி அதிகாரிகள், கட்டுப்படுத்த வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் உடனடியாக நகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். காலை பொழுதிலேயே சாலையில் நடந்து சென்ற நபர்களை தெருநாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. Related Link போதையிலிருந்த இளைஞரை தாக்கி பணம் பறிப்பு