Also Watch
Read this
By: Manigandan Raja

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை :
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஏலியம்பே டு பகுதியில் சுமார் 100 குடும்பத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேலாக அரசு இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக எங்கள் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved