Also Watch
Read this
By: Manigandan Raja

ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு :
குளித்தலை பெரிய பாலத்தில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதற்கு தயாரான நிலையில் இருந்து வந்தனர். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் , குளித்தலை வழியாக திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து டிரைவர் திடீர் என வலிப்பு நோய் ஏற்பட்டது. அப்போது டிரைவர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை பாலத்தில் நிறுத்தினார்.
போலிசார் கொடி அணிவகுப்பு பேரணிக்கு தயாராக இருந்த போலீஸார்கள் அரசு பேருந்து டிரைவர் பாதிப்பை உணர்ந்து போலீஸார்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அரசு பஸ் டிரைவரை மீட்டு கீழே இறக்கி அவருக்கு முதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பேருந்தினை போலிசார் இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தி பயணிகளை மாற்று பேருந்து மூலம் ஏற்றி விட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு பஸ் டிரைவர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்பொழுது பொதுமக்கள் பேருந்து நடத்தினர் ஈஸ்வரனிடம் கேட்டபோது இதுவரை எந்தவித பிரச்சனை இல்லாமல் டிரைவர் பணியை சிறப்பாக செய்து வந்தார் தற்பொழுது குளித்தலை
பேருந்து நிலையத்தில் தண்ணீர் வாங்கி குடித்தார்.
மேலும் நடத்துனரிடம் கேட்டபோது இதுபோல் முன்னாள் வலிப்பு வந்ததில்லை எனவும் கூறினார். 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு திருச்சி நோக்கிச் சென்ற அரசு
பேருந்து டிரைவர் திடீர் என வலிப்பு நோய் பாதிக்கப்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பேருந்து இயக்கும் போது டிரைவருக்கு எதிர்பாராதமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட டிரைவர் சுதாரித்துக் கொண்டு பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நிறுத்தி பயணிகளை பாதுகாத்த டிரைவருக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அளித்ததனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved