Also Watch
Read this
By: Manigandan Raja

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஜீப்பின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட ஜீப்பை, நந்தியாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி விட்டு ஒய்வெடுத்துள்ளனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்றிருந்த ஜீப்பின் மீது வேகமாக மோதியது. ஜீப்பில் இருந்த 6 பேரும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் தப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved