Also Watch
Read this
By: Manigandan Raja

வேகமாக சென்றவரை தட்டிக் கேட்ட விவசாயி :
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரேணுகோபால்(49) கடந்த 2 தினங்களுக்கு முன்பு தன்னடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயவேல் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகின்றன.
இதனால் விவசாயி ரேணுகோபால் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தடுத்து நிறுத்தி தெருவில் குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதாகவும் இருசக்கர வாகனத்தில் மிதவேகமாக செல்லுமாறு என கண்டித்துள்ளார்.
இதனால் இருதரப்பினரிடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விவசாயி ஜெயவேல் அருகிலுருந்த இரும்பு ராடை எடுத்து ரேணுகோபால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரேணுகோபால் மயக்கமடைந்தார் பின்னர் அக்கம் பக்கத்தினர் ரேணுகோபாலை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இன்று விடியற்காலையில் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இச்சம்பவம் குறித்து ரேணுகோபாலின் உறவினர் லதா கொடுத்த புகாரின் பேரில்.
ஆரணி தாலுக்கா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயவேலை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆரணி அருகே தெருவில் மிதவேமாக செல்ல அறிவுறுத்திய விவசாயி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved