Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று ஆளுங்கட்சி கவுன்சிலரே கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது 11 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் விஜய பாண்டியன் தங்களுடைய பகுதிக்கு சாலை, குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என ஆவேசமாக கூறினார்.