Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கனமழையின் போது கூரை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 98 வயதான கேசமாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved