தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் கோயிலின் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை திருடிய மூன்று பேரை சிசிடிவி பதிவு மூலம் போலீசார் கைது செய்தனர். கடந்த 18ஆம் தேதி சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோயிலின் பூட்டை உடைத்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பூஜை பொருட்கள் திருடப்பட்டன. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களை தேடிய போலீசார், கருப்பசாமி, பாலவிக்னேஷ் மற்றும் முகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.இதையும் படியுங்கள் : திருசெந்தூரில் கடல் சுமார் 500 அடி உள் வாங்கியது