Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டின் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்ற ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை சேர்ந்த சரவணன் என்பவர் மின் இணைப்பை மாற்ற மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்த நிலையில், வயரிங் ஒப்பந்ததாரர் பாண்டியராஜன் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவணன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயன பவுடர் தடவிய நோட்டை கொடுத்தனுப்பி பாண்டியராஜனை கையும் களவுமாக பிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved