Also Watch
Read this
By: Web Team

ஆடிக் கிருத்திகையை ஒட்டி, திருச்செந்தூரில் குவிந்த பக்தர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடிக் கிருத்திகை, கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த பக்தர்களால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களின் கார், பைக் மற்றும் பேருந்துகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததால், திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved