Also Watch
Read this
By: Manigandan Raja

காது குத்தும் நிகழ்ச்சியில் விபரீதம் :
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் ராஜேஸ்வரி தம்பதிகள் 11 வயது குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சிக்காக பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அய்யனார் பாளையம் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு தங்களது உறவினர்களுக்கு சுமார் 40 பேரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
கோவில் வளாகப் பகுதியில் பொங்கல் வைக்கும் போது ஏற்பட்ட புகை மூட்டத்தால் அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்து இரண்டு குழந்தைகள் உட்பட 20க்கும்
மேற்பட்டோரை தேனீக்கள் கடித்துள்ளது.
தேனீக்கள் கடித்ததில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved