Also Watch
Read this
By: Fyrose Banu

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகை மற்றும் ஊருக்குள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோயிலை சுற்றி வரும் குரங்குகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகை பகுதியில் கடந்த சில தினங்களாக குரங்குகள் சுற்றி வருகின்றன. இந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
அச்சுறுத்தும் குரங்களை பிடிக்க கோரிக்கை
மேலும் பொதுமக்கள் நடமாட முடியாதவாறு கோபமாக கத்தியும் குரங்குகள் அச்சுறுத்தி வருவதாகவும் உடனே ஊருக்குள் சுற்றித் திரியும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட வேண்டும் என வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved