நாகப்பட்டினத்தில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டிடம் கட்டுமான பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற செய்திகள் வெளியிட்டு உறுதுணையாக இருந்த நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கும், தமிழக முதல்வருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்காடம்பாடியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக புதிய டைடல் நியோ பூங்கா கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மூன்று தளங்களுடன் நியோ பூங்காகாடம்பாடியில் 61,000 சதுரடி பரப்பளவில் 43.78 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் நியோ பூங்கா கட்டப்படவுள்ளது. நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி நாகப்பட்டின நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, குத்துவிளக்கேற்றி பணியை தொடங்கி வைத்தனர்.நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றிநாகப்பட்டினத்தில் விவசாய பூமியில் வேண்டும் என கோரிக்கை வைத்த செய்தியை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு அரசின் கவணத்திற்கு கொண்டு சென்றது. அதனால் நாகையில் டைடல் நியோ பூங்கா வந்ததற்காக தமிழக முதல்வருக்கும், செய்திகள் வெளியிட்ட நியூஸ் தமிழுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர் Related Link விஜய் முதல்ல உங்க மனைவியோட கண்ணீர துடைங்க...