Also Watch
Read this
Posted on: Aug 20, 2024 11:02 AM
By: Admin News Tamil

லேட்டரல் என்ட்ரி முறையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பொது ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்க்கு மன்மோகன் சிங், மாண்டேக் சிங் லேட்டரல் என்ட்ரி- ல் வந்தவர்கள்தான் என சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பதிலடி கொடுத்துள்ளார். 1976-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நிதித்துறை செயலாளராக அப்போதைய காங்கிரஸ் அரசு எப்படி நியமித்தது என கேள்வி எழுப்பியவர், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றார். விதிகளை வகுக்க UPSC க்கு ஆணை வழங்கியதன் மூலம் லேட்டரல் என்ட்ரி முறையை முறைப்படுத்தியவர் பிரதமர் மோடி என்றவர் இதில் பாஜக, ஆர்எஸ்எஸ் பிரச்சினை எங்கே வந்தது என்றார். மேலும் பொய்களைப் பரப்பி மக்களை தவறாக வழிநடத்தவும், யுபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்களின் நற்பெயரைக் கெடுக்கவும் ராகுல் காந்தி முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved