Also Watch
Read this
Posted on: Aug 30, 2024 08:38 AM
By: Srini Vasan

பிரதமர் மோடி வரும் 31ஆம் தேதி தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிரவும், மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved