Also Watch
Read this
By: Web Team

மேற்குவங்க மாநிலத்தில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 13 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பங்குரா மாவட்டத்தின் ஒண்டா பகுதியில் 4 பேரும், கோடுல்புர், ஜாய்பூர், பட்ராசயேர் மற்றும் இண்டாஸ் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் என 8 பேர் மின்னல் பாய்ந்து பலியானதாக, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேபோல, புர்பா பர்தாமன் மாவட்டத்தில் மாதாப்திஹி பகுதியில் 2 பேரும், அவூஸ்கிராம், மங்கல்கோட் மற்றும் ரெய்னா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் என 5 பேர் மின்னல் பாய்ந்து பலியானதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே, மோசமான வானிலையின்போது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved