Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவை வீணாக்கினால் 20 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நேரம், வேலை, டையட் என பல காரணங்களை கேற்கொள் காட்டி உணவை வீணாக்குவது தற்போது சாதாரணமாகி விட்டது. இதனை தடுக்கும் விதமாக உணவை முழுமையாக சாப்பிடாமல் வீணாக்கினால் பில்லுடன் சேர்ந்து 20 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவு வீணாக்கப்படுவது தடுக்கப்படும் என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், காசு கொடுத்து வாங்கிய பின்னர் சாப்பிடுவதும், கீழே கொட்டுவதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved