Also Watch
Read this
By: Manigandan Raja

ஆபத்தை உணராமல் பொதுமக்கள் எடுத்து சென்றனர்
மத்தியப் பிரதேச மாநிலம் பீனாகன்ஜ் அருகே சாலையில் பாமாயில் டேங்கர் லாரி நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனிடையே ஆபத்தை உணராமல் வழிந்தோடும் எண்ணெயை பொது மக்கள் எடுத்துச் சென்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண்களுக்கு அரசு பேருந்துகளில் ஒருநாள் இலவச பயணம்
ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் ஒருநாள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் பெண் பயணி தங்களுடன் ஒரு துணையையும் கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா - கேந்திபாராவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு
ஒடிசாவின் கேந்திரபாரா ((Kendrapara)) மாவட்டத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகப் பெய்து வரும் தொடர் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற முடியாமல் தவிக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு, முகாம்களில் தங்க வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved