Also Watch
Read this
By: Manigandan Raja

நடவடிக்கை எடுக்காத அதிகாரியை சூழ்ந்த மக்கள்
மகாராஷ்ட்ராவில் காலாவதியான உணவை விற்ற கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காத அதிகாரியை மக்கள் முற்றுகையிட்டனர். சத்ரபதி சம்பாஜிநகரில் இயங்கி வந்த கடையில் உணவு சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனால் சம்பவ இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு செய்தபோது காலாவதியான பிஸ்கட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதிகாரி நடவடிக்கை எடுக்காததால் அவரை சூழ்ந்த மக்கள், அந்த பிஸ்கட்டை உண்ண சொல்லி கட்டாயப்படுத்தினர்.
கார்கே விவகாரம் - வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
உத்தரகாண்டில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்குப் பின் விழா மேடை புனித நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் நீதியை நிலைநாட்ட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved