Also Watch
Read this
By: Manigandan Raja

நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த 15 வீடுகள்
நாகாலாந்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், 3 பெண்கள் உட்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மோன் ((Mon)) மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து முழுமையாக சேதமடைந்தன.
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 11 பேர் மீட்பு
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 11 பேரை ராணுவர் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆற்றின் மறு கரையில் சிக்கித் தவித்த மக்களை கயிறு கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்தனர். ஆற்றில் நீர் வரத்து அதிரித்து இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம்

ஜம்மு காஷ்மீரில் திடீர் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 17 பேர் பலியாகி உள்ளனர். மலைப்பாதைகளில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. ரஜோரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வாகனங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.