மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வைல் பார்லே அருகே உள்ள Western எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆமைபோல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மலபார் ஹில் சாலை, சியோன் பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.