Also Watch
Read this
By: Web Team

உத்தரபிரதேசத்தில் தன்னை உயிருடன் புதைக்க திட்டமிட்ட மனைவி மற்றும் சகோதரர்களிடமிருந்து கணவன் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பரேலியில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிய ராஜீவ், கை கால்கள் உடைந்த நிலையில் வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது மனைவி மற்றும் அவரின் சகோதரர்கள் குண்டர்களை வைத்து ராஜீவின் கை கால்களை உடைத்து அவரை உயிருடன் புதைக்க திட்டம் தீட்டியது தெரிந்தது.
இதற்காக வனப்பகுதிக்கு சென்றவர்கள் ஆள்நடமாட்டம் தென்பட்டதால் அவரை அப்படியே விட்டுவிட்டு சென்றதில் உயிர் பிழைத்தாக ராஜீவ் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved