Also Watch
Read this
By: Web Team

ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த செயலால் பிராந்திய அளவிலான போர் வெடித்து மேற்காசியாவில் நிலைத்தன்மை குலைந்து விடும் என தெரிவித்துள்ள இடதுசாரிகள், இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் விடுத்துள்ள கண்டனத்தில் இந்திய அரசும் இணைந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை கண்டிப்பதாகவும், தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஒரு ரவுடி நாடாக செயல்படுகிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved