Also Watch
Read this
By: Web Team

இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் பெய்த பெருமழையால் இதுவரை இல்லாத வகையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பருவமழை தொடங்கியது முதலே இமாச்சல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மண்டியில் மாவட்டத்தில் பெய்த மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் துனாக்கில் உள்ள செராஜ் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அங்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மழை வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved