Also Watch
Read this
By: Manigandan Raja

பைபர் படகுகள் மூலம் மீட்பு பணிகள் தீவிரம்
அசாம் மாநிலம் ஜோஹாட் நகரத்தில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை உள்பட பல இடங்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதையடுத்து பைபர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலி
சிக்கிம் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், உள்ளே சிக்கியுள்ள 20-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. நம்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் சுரங்கப்பாதை கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் நுழைவு வாயில் பகுதி மூடிவிட்டது.
மாநில அரசு பணிகளுக்கு தாய்மொழியான பெங்காலி கட்டாயம்

மேற்கு வங்கத்தில் அனைத்து மாநில அரசு பணிகளுக்கும் தாய்மொழியான பெங்காலியை செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க போவதாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மத்திய அரசுடன் அலுவல் ரீதியான தகவல்களுக்கு, வெளிநாட்டு மொழிக்கு பதிலாக வங்காளம் மற்றும் அலுவல் மொழியான இந்தியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.