பஞ்சாபில் 15 இடங்களில் நடைபெற்ற சோதனையில் செல்போன்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.