Also Watch
Read this
By: Web Team

அரபிக் கடலில் ஒரு புதிய துறைமுகத்தை கட்ட அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.
அவ்வாறு எடுக்கப்படும் கனிமங்களை உலகச் சந்தைக்கு கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பாஸ்னி நகரில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க முதலீட்டாளர்கள் கட்டவும், இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த துறைமுகம் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே எனவும், அமெரிக்க ராணுவ தளமாக இருக்காது எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved