Also Watch
Read this
By: Manigandan Raja

அரசியலுக்கு அப்பாற்பட்டது :
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவரை வரவேற்க முதலமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் யாரும் வரவில்லை.
இந்த சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லை மீறி செயல்பட்டு வருவதாகவும், குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved