Also Watch
Read this
By: Web Team

பிரதமர் மோடியை தாம் சந்திப்பதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமில்லை என்றும், அவர் உண்மைக்கு மாறான தகவலை கூறுவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனை 6முறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன் என்று நயினார் நாகேந்திரன் கூறுவதெல்லாம் பொய் என்றும், இனியாவது அவர் உண்மையை பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved