Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்வீடன் முன்னாள் வீரர் ஸ்லட்டான் சாதனையை முறியடித்தார்
சவுதி புரோ லீக் தொடரில் அல் ரியாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நாசர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். தொழில்முறை கால்பந்து பயணத்தில் தொடர்ந்து 25-வது சீசனாக கோல் அடித்துள்ளார்.
இதன் மூலம், தொடர்ந்து 24 சீசன்களில் கோல் அடித்திருந்த ஸ்வீடன் முன்னாள் வீரர் ஸ்லட்டான் இப்ராஹிமோவிச்சின் சாதனையை முறியடித்துள்ளார். சவுதி புரோ லீக் வரலாற்றில் ரொனால்டோ இதுவரை 103 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முகமது அல் சஹ்லாவியுடன் இணைந்து முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: ஜானிக் சின்னர் விலகல்
உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரில் அறிமுகமான இவர், முதல்முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்காமல் விலகியுள்ளார். வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் தொடரில், கடந்த 2024-ம் ஆண்டு சாம்பியனான ஜானிக் சின்னர் பங்கேற்காதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved