Also Watch
Read this
Posted on: Feb 22, 2026 09:53 AM
By: Manigandan Raja

வாகனங்கள் எரிந்து சேதம் :
சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து வெடித்து விபத்துக்குள்ளாகி லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர். தலைநகர் சாண்டியாகோ அருகேயுள்ள ரென்கா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது.
பெரும் புகையுடன் பல அடி தூரத்திற்கு தீப்பிழம்புகள் பரவியதில் 50 வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved