ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான புகார் மற்றும் தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு, நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகன் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதி முடிவெடுக்க மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பி வைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோர முடியாது என, திரைப்பட சான்றிதழ் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.