Also Watch
Read this
By: Web Team

பொதுவாகவே, நடிகர்கள் உடல் நலத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த வகையில், டயட்டை ஃபாலோ பண்ணும் நடிகர் ஒருவர், தனது உடல் ஆரோக்கியத்துக்காக மாலை 6 மணிக்கு மேல், எதுவும் சாப்பிடாததே காரணம் என்று கூறி உள்ளார். அவர் தான், பிரபல நடிகராக வலம் வரும் அக்சய் குமார்.
இந்தி திரையுலகில், தனது 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அக்சய் என்ன சொல்கிறார்?
“உடல் ஆரோக்கியத்துக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். கடந்த 20 ஆண்டுகளாக மாலை ஆறு மணிக்கு மேல் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை. பார்ட்டிகளுக்கு போனால் கூட கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பது போல் நடிப்பேன். ஆனால், குடிக்க மாட்டேன். இரவில் உணவு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும், உணவு முறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறேன். ஒழுக்கமும் அவசியம். எனது வெற்றிக்கு ஒழுக்கமும் ஒரு காரணம்.”
இவ்வாறு அக்சய் குமார் பேசி இருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved